வால்பாறையில் வளைத்து வளைத்து கொட்டிய கனமழை.. சென்னையை விட அதிகம்! தமிழ்நாட்டிலேயே டாப் இதுதான்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 58 மிமீ மழை கொட்டித்தீர்த்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை பெய்துள்ள மழை மிமீ அளவில். சென்னை நுங்கம்பாக்கம் - 37.7, சென்னை மீனம்பாக்கம் - 15.3, கோவை மாவட்டம் வால்பாறை- 58.0, புதுச்சேரி - 28.0, கடலூர் - 16.0, கோவை AP - 9.0, திருச்சிராப்பள்ளி - 7.0, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை- 6.0, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - 2.0, நாகப்பட்டினம் - 2.0 என்று குறிப்பிட்டு உள்ளது.

அதேபோல், திருப்பத்தூர் - 1.0, வேலூர் - 0.3, நீலகிரி மாவட்டம் குன்னூர் - 0.2, சேலம் - 0.1, செங்கல்பட்டு விஐடி சென்னை - 11.5, சென்னை எண்ணூர் துறைமுகம் - 50.0, காஞ்சிபுரம் கட்டப்பாக்கம் - 1.0, கடலூர் மாவட்டம் சிதம்பரம் - 11.0, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - 43.0, திருநெல்வேலி - 0.5, வேலூர் விரிஞ்சிபுரம் - 1.0, திருவள்ளூர் திரூர் - 1.0, செங்கல்பட்டு மேற்கு தாம்பரம்- 1.0, சென்னை பள்ளிக்கரணை - 20.8 மிமீ அளவில் மழை பெய்து உள்ளது.
சென்னை தரமணி - 27.5, சென்னை யம்கா நந்தனம் - 25.5, காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் - 1.5, காஞ்சிபுரம் மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் - 21.5, காஞ்சிபுரம் மாவட்டம் எல்மோயிஸ் கொலப்பாக்கம் - 9.0, காஞ்சிபுரம் மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழகம் - 17.5, திருவள்ளூர் மாவட்டம் குட் வில் பள்ளி வில்லிவாக்கம் - 20.0, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி - 2.0, திருவள்ளூர் மாவட்டம் புழல்- 11.5" என்று குறிப்பிட்டு உள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று தெரிவித்து உள்ளது."
மழை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், "குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.11.2023 முதல் 27.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும். இன்றைய வெப்பநிலை 24-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications