Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, நெல்லை, தென்காசி, மதுரை என 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்து எடுத்து வருகிறது. தினம் தினம் வெயிலின் அளவு உக்கிரமாகிக் கொண்டே வந்தது. தென் மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று அப்படியே கிளைமேட் மாறியது. தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Low Pressure Alert Non-Stop Rain for Next Hour Across 17 Districts from Coimbatore to Tenkasi

அடுத்த ஒரு மணி நேரம்

ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதேபோன்று கோவை, ஈரோடு, நீலகிரியில் ஒரு சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கோடை வெயிலுக்கு இதமாக மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது. தற்போது அடுத்த 1 மணி நேரத்தில் 17 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், "தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அதாவது மாலை 4 மணி வரை, சேலம், ஈரோடு, தருமபுரி, கோவை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், விருதுநகர், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும். மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கவும் வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தை பொறுத்தவரை நேற்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஈரோடு, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்பு

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தென்தமிழகதில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி, மின்னலுடன் மழைக்கு சான்ஸ்

வரும் 7 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9, 10 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+