Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டார்க்கெட் தென்தமிழகம்.. 2 நாள் இடி மின்னலோடு கனமழை! உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இது நவம்பர் 16ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழகத்தில் 2 நாட்கள் இடி மின்னலோடு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Low pressure area will form in Bay of Bengal on November 14 and Southern Tamil Nadu gets 2 days heavy rain

அதேபோல் மாநிலத்தில் பிற மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையின்போது மழை வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே தான் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் 14ம் தேதின தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தென்தமிழகத்தில் 2 நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14ம் தேதி உருவாக்க கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதற்கிடையே தான் நவம்பர் 14, 15 ஆகிய 2 நாட்கள் கடலோர ஆந்திரா, தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் 15ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்கு 40-45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த 2 நாட்களும் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 31-32 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+