மதுரை மக்கள் வெளியில் தலைகாட்ட முடியல.. கொளுத்தி எடுத்த வெயில்.. இன்று தமிழ்நாட்டிலேயே டாப்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் வாட்டி எடுத்த கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தமிழகத்தில் இன்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே ஆகிய கோடை மாதங்களில் தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்தது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்ததால் வெப்பத்தின் பிடியில் இருந்து தமிழக மக்கள் தப்பிக்க முடிந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் ஜூலை முதல் வாரம் வரை வெயில் வாட்டி எடுத்தது.

Weather rain Tamil nadu

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையிலும், சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து வாட்டி வதைத்து வருகிறது.

சனிக்கிழமையான இன்று தமிழகத்தில் 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகி உள்ளது. மதுரை நகர்ப்பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. மிக அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரையில் இன்று வெயில் வாட்டி எடுத்த நிலையில், வெளியே செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். மேலும், திருச்சி, தஞ்சாவூர், பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், கரூர், பரமத்தி ஆகிய பகுதிகளிலும் வெயில் கொளுத்தியது.

Weather rain Tamil nadu

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+