அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி..வங்க கடலிலும் ரெடியாகுதே.. மொத்தமாக மாறப்போகும் வானிலை
சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை விரைவில் விடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க போகிறது.
இந்நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கேரளாவின் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன, குறிப்பாக திருவனந்தபுரம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தமிழநாட்டை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் போது அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது ஒருபுறம் எனில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது உறுதியாகி உள்ளது. குறிப்பாக 22ம்தேதிக்கு பிறகு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக். 18) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, கூடிய லேசான மழைபெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 முதல் 78.87 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தமிழகத்தில் அக். 17ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக திருப்பூர் உப்பாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, களியல், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தீர்த்தாண்டதானத்தில் தலா 8 செ.மீ. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கோவை மாவட்டம் சூலூர், விமான நிலையம், திருச்சி மாவட்டம் தென்பரநாட்டில் தலா 7 செ.மீ. மழை பதிவானது" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications