பயணிகளே நோட் பண்ணுங்க.. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம் போல இயங்குமாம்.. வெளியான அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று (5.12.2023) வழக்கம் போல இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் வடதமிழக கடலோரம் வழியாக ஆந்திரா நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னையை விட்டு விலகிச் சென்றுவிட்டது. சென்னையிலிருந்து 130 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ளது. இதனால் இன்று இரவு முதல் மழையானது படிப்படியாக குறையும் என வானிலை மையம் கணித்துள்ளது. முன்னதாக கடந்த 2 தினங்களாக சென்னையில் பெய்த மழையால் சென்னையே வெள்ளக்காடானது.

சென்னையில் முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவு மழை பாதிப்பு உள்ளது. சென்னையில் மையப்பகுதிகளில் உள்ள சாலைகளில் கூட வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 48 மணி நேரமாக பெய்த மழை தற்போது குறைந்துள்ளது. மழை படிப்படியாக குறைந்துள்ளது. பெருமழையால் சென்னையில் இன்று பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சுரங்கப்பாதைகளிலும் பல முக்கிய சாலைகளிலும் தண்ணீர் ஆறுபோல ஓடியதால் பேருந்துகளை இயக்க முடியாத சூழலும் இருந்தது. புறநகர் ரயில் சேவையும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்பட்ட நிலையில், பிறகு புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. சென்னை எழும்பூர், செண்டிரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
சென்னையில், மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்னை நகருக்குள் செல்பவர்கள் மெட்ரோ ரயில்களில் தான் அதிகம் பயணித்ததை காண முடிந்தது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று(05.12.2023) வழக்கம் போல காலை 5 மணிக்கு தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை, மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும். பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications