Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொந்தா புயல்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட இறுதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொந்தா புயல் காரணமாக, வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தென் சென்னையில் தூறல் 2 மணி நேரம் வரை தொடரும் என்றும் பின்னர் மழை குறைந்து மெதுவாக நிற்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வட சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 60-70 மி.மீ. பெய்திருப்பதாகவும் வெதர்மேன் தனது பதிவில் கூறியுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26-ந்தேதி இரவு 'மொந்தா' புயல் உருவாகியது. இந்த புயல் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு வந்தது. குறிப்பாக சென்னைக்கு கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டு நேற்று சென்றது. இன்று தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று இரவு மாலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. '

weather Tamil Nadu Weatherman Montha

இதன்படியே புயல் காக்கிநாடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மொந்தா புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று காலை முதலே நல்ல மழை பெய்து வந்தது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலையும் பரவலாக மழை பெய்தபடியே உள்ளது. மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்ட அறிவிப்பில், "மொந்தா புயலின் இறுதி மழை அறிவிப்பு: வட சென்னையின் தொடர் மழையும், தென் சென்னையின் தூறலும் இன்னும் 2 மணி நேரம் தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாகக் குறைந்து நின்றுவிடும்.

பதிவான மழையளவு விவரம்: வட சென்னை: பொதுவாக 60 முதல் 70 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதில், கடலுக்கு மிக அருகில் உள்ள எண்ணூர் மற்றும் காசிமேடு (கத்திவாக்கம்) பகுதிகள் மிகக் கனமழையைப் பதிவு செய்துள்ளன. தென் சென்னை: இங்கு 30 முதல் 50 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

பொதுவாக, "நான் எதிர்பார்த்தது போலவே," "நான் கணித்ததுபோலவே" என்று தன்னைப் புகழ்ந்து பேசுவது எனது வழக்கம் அல்ல. ஆனால், இந்த முறை நான் கொஞ்சம் தன்னைப் பாராட்டிக் கொள்ள விரும்புகிறேன். மழைப்பொழிவின் அளவு மற்றும் அதன் வடிவம் (Rainfall Pattern) ஆகியவற்றுடன் எனது கணிப்பு எவ்வளவு துல்லியமாகப் பொருந்திப் போனது என்று பார்க்கும்போது இது சரியான தருணம். இது ஒரு கடினமான புயலாக இருந்தபோதிலும், இறுதியில் நாங்கள் அதைச் சரியாகக் கையாண்டோம். சென்னைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மழை அல்லது இடைவேளை மழை பெய்யும்." இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+