வட சென்னையை குறி வைத்து அடிக்கும் பருவமழை.. இன்று செஞ்சுரி.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: இந்த பருவமழைக்கு வடசென்னையை ரொம்பவே பிடித்திருக்கிறது, இன்று வடசென்னை பகுதியில் மழை வெளுத்து வாங்கியுள்ளது என அப்டேட் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்று அதிகாலை முதல் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளி விட்ட மழை மீண்டும் பல்வேறு இடங்களில் பெய்தது.

குறிப்பாக வடசென்னை பகுதியில் இன்று அதிக மழை பெய்தது. காலையிலேயே மழை பெய்ததால் அலுவலகம் செல்வோர், பள்ளி , கல்லூரிகளுக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களுக்கும் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்: சென்னையில் பெய்து வரும் மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த பருவமழைக்கு மீண்டும் வடசென்னையை ஸ்பெஷலாக பிடித்துள்ளது. இன்று காலை 8.30 மணி முதல் வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் பரவலாக மழை பெய்தது. அதிகளவிலான மேகங்கள் வட சென்னையை நோக்கி நகர்கின்றன. மணலி - மாதவரம் பெல்ட்டில் 100 மி.மீ மழை சாத்தியம். இன்று காலை 8.30 மணிக்குப் பிறகு மத்திய மற்றும் தென் சென்னையில் மழை அதிகம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம் அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் மழை: மேலும் நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications