Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணிப்பெல்லாம் பொய்யா கோபால்.. வருத்தப்பட வைத்த வடகிழக்குப் பருவமழை! 6 வருஷத்தில் இல்லாத மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. மழை தொடங்குவதற்கு முன்பு, "இயல்பை விட அதிகமாக மழை பெய்யும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த கணிப்பு இந்தாண்டு தவறாகி, மழை குறைவாகவே பதிவானது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு 33 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்த நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த மூன்று மாதங்களில் சேர்த்து 44.2 செ.மீ. மழை தான் இயல்பான அளவாக கருதப்படுகிறது. அதில் அக்டோபரில் 18 செ.மீ., நவம்பரில் 17 செ.மீ., டிசம்பரில் 9 செ.மீ. பெய்ய வேண்டும்.

இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் நன்றாகவே மழை பெய்தது. சுமார் 23 செ.மீ. மழை பதிவான நிலையில், அது இயல்பை விட 36 சதவீதம் அதிகம். ஆனால் அதன்பிறகு நிலை மாறிவிட்டது. நவம்பர் மாதத்தில் வெறும் 15 செ.மீ. மட்டுமே மழை பெய்தது.

Northeast Monsoon Rainfall rain

வடகிழக்கு பருவமழை

டிசம்பர் மாதத்தில் அதைவிட குறைந்து 4.5 செ.மீ. தான் பெய்துள்ளது. மூன்று மாதங்களையும் சேர்த்து பார்த்தால், தமிழகமும் புதுச்சேரியும் இந்தாண்டு 42.8 செ.மீ. மழை தான் பெற்றுள்ளன. இது இயல்பை விட சுமார் 3 சதவீதம் குறைவு. சென்னை, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, திருப்பூர், காஞ்சிபுரம், சேலம் போன்ற பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது. புதுச்சேரியிலும் நிலை அதேபோல தான். ஆனால் விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டும் இயல்பை விட சற்றே அதிகமாக மழை பெய்தது.

மழை குறைவு

கடந்த 5 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை நல்ல அளவில் பெய்து வந்தது. ஆனால் இந்தாண்டு அந்த நிலை மாறி மீண்டும் குறைவான மழை தான் பதிவாகியுள்ளது. இதற்கு கடலில் சாதகமான நிலைமை இல்லாதது, வானிலை சூழல் மாறியது போன்றவை காரணமாக கூறப்படுகின்றன. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யலாம் என்றாலும், டிசம்பர் மாதம் முடிந்துவிட்டதால் அது வடகிழக்கு பருவமழை கணக்கில் சேராது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை மற்றும் இந்த வடகிழக்கு பருவமழையின் முதல் பாதியில் நல்ல அளவு மழை பெய்ததால், மாநிலத்தின் பெரும்பாலான நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. அதனால் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பார்த்தால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டிய கணிப்பை போல இல்லை. மழை அளவு இயல்பைவிட சற்று குறைந்துள்ளது. ஆனாலும் நீர்த்தேக்க நிலைமை காரணமாக உடனடியாக பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் இல்லை என கூறப்படுகிறது.

சராசரிக்கு குறைவான மழை

ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சராசரியை விட மூன்று சதவீதம் மழை பொழிவு குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு 52%, 2014ஆம் ஆண்டு 62%, 2021ஆம் ஆண்டு 59 %, 2024ஆம் ஆண்டில் 33 சதவீதமும் இயல்பை விட அதிக வடகிழக்கு பருவமழை பெய்திருந்தது. 2018ஆம் ஆண்டு தான் கடைசியாக இயல்பை விட 24 சதவீதம் மழை குறைவாக செய்திருந்தது. அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இயல்பு மழை அளவான 44.2 செ.மீ.ஐ விட 3 சதவீதம் குறைவாக மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+