Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

North East Monsoon: வடகிழக்கு பருவமழை எப்போது? இந்திய வானிலை மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், தெற்கு ஆந்திரம் ஆகிய பகுதிகளுக்கு பலனைக் கொடுக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16- 18 ஆகிய தேதிகளில் தொடங்க சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை வரும் 16- 18 தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது. அதே நேரம் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசை காற்று வீசக் கூடிய நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 16- 18 தேதிகளில் தொடங்குவதற்கான சாத்தியம் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

weather rain north east monsoon

வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய பகுதிகள் ஆகும். ஆனால் சில நேரங்களில் மழையானது பிப்ரவரி மாதம் வரை கூட கடுங்குளிருடன் பெய்கிறது. இந்திய வானிலை மையம் சொன்னது போல் வரும் 16- 18 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என்றால் 20, 21 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தால் பட்டாசு வியாபாரம் பாதிக்கும் நிலையும், பட்டாசு வெடிக்க முடியாத சூழலும் இருப்பதாக மக்கள் கவலை கொள்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு மழை இல்லாத நிலையே இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மழை பெய்யும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த தீபாவளியை மழையுடன் கொண்டாட வேண்டிய சூழல் நிலவுகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் கீழ் கோத்தகிரி பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்று காலை முதலே கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரவேனு, கட்டபெட்டு, கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இது தோட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+