சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. கனமழை பிச்சு உதறப் போகுது! வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம். மழை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
* சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
* நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விழுப்புரம், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications