தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்! 20 செ.மீ வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. எனவே நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனல் தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை கூடுதலான மழைப்பொழிவை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 38% கூடுதல் மழையை கொடுத்திருக்கிறது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பை விட 91% கூடுதலாக மழை பெய்திருக்கிறது. அதாவது அக்.1 தொடங்கின் டிச.15 வரை இந்த நாட்களில் இயல்பாக 253.7 மி.மீதான் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 485 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கறது. நாகையில் 1161.1 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
நாகப்பட்டினம்
திருவாரூர்
கடலூர்
மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்
தஞ்சாவூர்
அரியலூர்
பெரம்பலூர்
புதுக்கோட்டை
திருச்சிராப்பள்ளி
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிபேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச. 19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேநேரம் டிச.17 மற்றும் 18ம் தேதிக்கு தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications