குமரி உட்பட 15 மாவட்ட மக்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்திருக்கிறது. நேற்று பெய்த மழையில் கோவை, திருப்பத்தூர் மற்றும் நாகர்கோவிலில் வெள்ளம் தேங்கியது. இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்தில் கன்னியாகுமரி உட்பட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவமழை பரவலான மழையை கொடுக்கும். அந்த வகையில் கடந்த ஜூலையில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில் அதிக மழையை கொடுத்த இது, டெல்டா மாவட்டங்களை கண்ணாமூச்சி காட்டி ஏமாற்றிவிட்டது.

rain weather

ஆனால், அக்.1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, மாநிலம் முழுவதும் பாரபட்சமில்லாமல் பெய்து வருகிறது. இன்று காலை வரை மொத்தமாக 200.2 மி.மீ அளவுக்கு பெய்திருக்கிறது. இது இயல்பை விட 54% அதிகமாகும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை மற்றும் மயிலாடுதுறையில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அதேபோல திருப்பத்தூர், வேலூர் என வட மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, தென்காசி என தென் மாவட்டங்களிலும் மழை ஒரு காட்டு காட்டியிருக்கிறது.

கனமழை காரணமாக கன்னியாகுமரியில் கோதையாறு, கிளவியாறு, மோதிரமலையாறு, கல்லாறு, குழித்துறை தாமிரவருணி போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மறுபுறம் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது. இதனால் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு அதாவது மாலை 4 மணி வரை 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், சிவகங்கை, பெரம்பலூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சிக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.

ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+