Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உட்பட 23 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு! ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வட கடலோர மாவட்டங்களில் மழையை கொடுத்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Chennai rain tamil nadu

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் கடலூரில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?

மிதமானது முதல் கனமழை பெய்யும்போது இந்த அலர்ட் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் 6-12 செ.மீ வரை மழை பெய்யும் என்கிற நிலை இருக்கும்போது, மஞ்சள் அலர்ட் கொடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 12-20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்போது ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படுகிறது. ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டால், கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அர்த்தம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+