சென்னை மட்டுமில்லை.. புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 17ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேடிசிசி எனப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

tamil nadu rains puducherry

இந்த நிலையில் நேற்று முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை சில பகுதிகளுக்கு ரெட் அலட்டும், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல நாளை வரை மழை பெய்யும் என்பதால் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

tamil nadu rains puducherry

இதற்கிடையே அந்தப் பகுதிகளில் அத்தியாவசிய துறைகள் தவிர்த்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டு பகுதிகளிலும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளையும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+