3 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை.. சென்னை வானிலை மையம் ஜில் அப்டேட்
சென்னை: கோயம்புத்தூர், தென்காசி, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

வரும் புதன், வியாழக்கிழமைகளில் (பிப்ரவரி 4, 5 ஆம் தேதிகளில்) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காலை 10 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications