குறையும் மழை.. சென்னையில் அதிகாலையில் ஏற்படும் திடீர் மாற்றம்! இனி இப்படிதான்.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் மழை மெல்லக் குறைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சென்னை உட்பட பல பகுதிகளில் மழை குறைந்து, பனி அதிகரித்துள்ளதால் குளிரும் உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல ஒரு இதமான கிளைமேட் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை மெல்லக் குறைந்து வருகிறது. சென்னை உட்பட பல இடங்களில் மழை கொட்டிய நிலையில், இப்போது பெரும்பாலான இடங்களில் மழை குறைந்துவிட்டது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை குறைந்து பனி அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.. இதனால் குளிரும் அதிகரித்துள்ளது.

குறைந்த மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை குறைந்துவிட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதேபோன்ற கிளைமேட் தான் இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மழை எப்படி இருக்கும்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிசம்பர் 10 முதல் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றைய தினம் (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று எச்சரிக்கை ஏதுமில்லை. நாளைய தினம் வட தமிழகக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 10ம் தேதி தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 11ம் தேதி தென்தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கவனம்
வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் டிசம்பர் 10ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications