அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அரியலூர், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது சற்று மழை குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை விட்டு விளாசிய நிலையில் தற்போது சற்று ஓய்ந்துள்ளது.

எனினும் காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை, குமரி, தஞ்சை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications