Cyclone Ditwah: அடுத்த 2 மணி நேரம் மழை விடாது.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவாரூர், விழுப்புரம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது மாலை 4 மணியளவில், சென்னையில் இருந்து 270 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் முதலில் 10 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் பிறகு 12 கிமீ வேகத்தில் நகர்ந்தது.

தொடர்ந்து தற்போது வேகம் குறைந்துள்ளது. 10 கிமீட்டரில் இருந்து 7 கிமீட்டராக குறைந்துள்ளது. சென்னையை நோக்கி 7 கிமீ வேகத்தில் வடக்கு - வட மேற்கு திசையில் தற்போது டிட்வா புயலானது நகர்ந்து வருகிறது. புயல் சென்னையை நெருங்க நெருங்க பலத்த காற்று வீசி வருகிறது. மணிக்கு 70 முதல் 80 கிமீ வரை காற்ற வீசக்கூடும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது.
இந்த சூழலில் மாலை 5 மணியளவில் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிட்வா புயல் வலுவிழக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. புதுவையில் இருந்து 80 கிமீ தொலைவியில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் தற்போது 5 கிமீ வேகம் என வேகம் குறைந்துள்ளது. இரவு 8 மணியளவில் புயல் வலுவிழக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதேபோன்று அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, தேனி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications