சென்னை, செங்கல்பட்டு தொடங்கி.. 38 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! இரவு யாரும் வெளியே வராதீங்க
சென்னை: டிட்வா புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு என 38 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இரவு 1 மணி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட 38 மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications