காலையிலேயே சம்பவம் இருக்கு.. 2 மாவட்டங்களுக்கு மழை ‘அலர்ட்’ கொடுத்த வானிலை மையம்!
சென்னை: தமிழ்நாட்டின் 2 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 14 ஆம் தேதியான இன்று, தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை ஜூலை 15 ஆம் தேதி, 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிக முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக ஜூலை 16 ஆம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், அடுத்த 5 தினங்களுக்கு வங்க கடலில் காற்றின் வேகமானது அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications