சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்னைக்கு நைட் விடாது.. 15 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு சென்னை முதல் குமரி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது பெய்த கனமழை மீண்டும் நாளை முதல் பெய்யத் தொடங்கும் என வானிலை மையம் கூறிய நிலையில் இன்று இரவே சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பருவமழை தொடங்கிய பின்னரும் ஒரு 10 நாட்களுக்கு தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது.

இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென நிரம்பியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கின. ஆனால் அதற்கு பிறகு வெயில் வெளுத்து வாங்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தாலும் அதற்கு முந்தைய ஒரு வாரம் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது.
இதன்பிறகு கடந்த ஒரு வாரமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கனமழை கொட்டியது. நாளை முதல் தான் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் கூறியிருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என கூறப்பட்டு இருந்தது.
இவ்வாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் இன்று இரவே மழை பெய்ய தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் கனமழை வெளுக்க தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, சென்னை, கோவை, திண்டுக்கல், குமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, நெல்லை, திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications