சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்னைக்கு நைட் விடாது.. 15 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு சென்னை முதல் குமரி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது பெய்த கனமழை மீண்டும் நாளை முதல் பெய்யத் தொடங்கும் என வானிலை மையம் கூறிய நிலையில் இன்று இரவே சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பருவமழை தொடங்கிய பின்னரும் ஒரு 10 நாட்களுக்கு தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது.

இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென நிரம்பியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கின. ஆனால் அதற்கு பிறகு வெயில் வெளுத்து வாங்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தாலும் அதற்கு முந்தைய ஒரு வாரம் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது.
இதன்பிறகு கடந்த ஒரு வாரமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கனமழை கொட்டியது. நாளை முதல் தான் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் கூறியிருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என கூறப்பட்டு இருந்தது.
இவ்வாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் இன்று இரவே மழை பெய்ய தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் கனமழை வெளுக்க தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, சென்னை, கோவை, திண்டுக்கல், குமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, நெல்லை, திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications