அடுத்த 2 மணி நேரம்.. தமிழகம் முழுக்க 17 மாவட்டங்கள் டார்கெட்.. விடாமல் கொட்டப் போகுது கனமழை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியது.
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

நெல்லையில் கொட்டிய கனமழை
இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மதியத்திற்கு பிறகு இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. நெல்லை பழைய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, டவுன், பேட்டை, சுத்தமல்லி என நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. தென்காசி மாவட்டத்திலும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த நிலையில் தான் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
"தமிழத்தில் இன்று இரவு 7 மணி வரை திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும்.
இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications