வெயிலுக்கு லீவு.. அடுத்த 3 மணி நேரத்தில்.. இடி மின்னலுடன் 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூ, குமரி உள்பட 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மதிய நேரங்களில் வெயில் குறைந்து ஜில்லான கிளைமேட் இருக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலும் அடித்து வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. புளியங்குடி, குற்றாலம், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை கொட்டியது. இதேபோன்று நெல்லை, குமரி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று மதியம் 1 மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், குமரி மற்றும் காரைக்காலில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது"
மழை காரணமாக ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications