இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்! மாலை 4 மணிவரை சென்னை+8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
சென்னை: நேற்று இரவு தொடங்கி தற்போது வரை சென்னையில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இடையில் கேப் இருந்தாலும், தொடர் மழை காரணமாக தாழ்வான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மாலை 4 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வ மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை நசநசத்துவிடும். வழக்கமாக நவம்பர், டிசம்பர் காலத்தில்தான் மழை தீவிரமெடுக்கும். ஆனால் இந்த முறை அக்டோபரிலேயே வேலையை காட்ட தொடங்கிவிட்டது. காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதிதான். நேற்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இது இன்றும் நாளையும், வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும். எனவே இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர். குறிப்பாக வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் தங்கள் கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தின் மீது நிறுத்தியிருந்தனர்.
மழை குறித்து விளக்கமளித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,
"சென்னையில் 6000 சதுர கி.மீ பரப்பளவில் பெய்யும் மொத்த மழையும் நான்கு வழிகளில் (எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம்) மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.
40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று கூறியுள்ளார்.
சூழல் இப்படி இருக்கையில் மாலை 4 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருப்பத்தூருக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கோவை, குமரி, நெல்லை, தேனிக்கு மாலை 4 மணி வரை மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications