Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெட் தக்காளி அலர்ட்! "சென்னைக்கு இன்னுக்கு ஒரு புடி.." வெளுக்கும் மழை! நறுக்கென விளக்கிய வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், இரவு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் பல இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 Red tomato alert for Chennai and KTCC says Tamilnadu weatherman

இன்று இரவும் தலைநகர் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.

கொட்டும் மழை: மேலும், நுங்கம்பாக்கம், எழும்பூர், தி. நகர், பாரிமுனை, சென்டிரல், விருகம்பாக்கம் என பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் கனமழை கொட்டியது. இன்னும் கூட நகரில் பல இடங்களில் நல்ல மழை பெய்தே வருகிறது. இந்த திடீர் மழையால் சென்னை முழுக்க குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னையில் இரவு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு மேலே நிகழும் வானிலை மாற்றங்களை விளக்கம் மேப்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும்,

தமிழ்நாடு வெதர்மேன்: இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை நகரம் மற்றும் கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகளுக்கு ரெட் தக்காளி அலர்ட்.. மழை மேகங்கள் சென்னை நகரை நெருங்கி வருகிறது. இதில் இடியுடன் கூடிய மழையின் அளவைப் பாருங்கள்.. இதே உக்கிரம் நீடித்தால், ஆகஸ்ட் மாதம் பெய்யும் மழை அளவு இன்று ஒரு புடி புடிக்கலாம்.. கேடிசிசி பகுதிகளில் இன்று அற்புதமான இரவு காத்திருக்கு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் தமிழகத்தின் பிற பகுதிகளில் வானிலை சார்ந்த எந்தவொரு செயல்பாடுகளும் பெரிதாக இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பலத்த காற்றும் வீசும் நிலையில், பல பகுதிகளில் கனமழை பெய்யும் போது கனமழையும் வீசும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வானிலை மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தது. அதில் சனிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+