அரபிக் கடலில் அதிதீவிர புயலானது தேஜ் புயல் ... அட்டாக்கில் இருந்து மகாராஷ்டிரா, குஜாராத் எஸ்கேப்!
டெல்லி: அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் தற்போது அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விடைபெற்ற நிலையில் நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. தென்மேற்கு அரபிக் கடலில் கடந்த 19-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது.

தேஜ் புயல்: இதனைத் தொடர்ந்து தென்மேற்கு அரபிக் கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. அரபிக் கடலில் உருவான இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டிருந்தது. இந்த தேஜ் புயல் தீவிர புயலாக உருமாறி உள்ளது. இது மேலும் வலுவடைந்து தற்போது அதிதீவிர புயலாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எங்கே இருந்தது? இன்று அதிகாலை நிலவரப்படி தென்மேற்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அக்டோபர் 22 (இன்று) மாலைக்குள் அதிதீவிர புயலாக உருமாறும். ஏமன் (யேமன்) நாட்டின் சொகோட்ராவில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் தெற்கு- தென்கிழக்கில் 730 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

கரையை கடப்பது எப்போது?: மேலும் தேஜ் அதிதீவிர புயலாக மாறிய நிலையில் ஏமன்- ஓமன் இடையே ஏமனின் அல் கைதா மற்றும் ஓமனின் சலாலா இடையே அக்டோபர் 25-ந் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேஜ் புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் தற்போது தேஜ் புயல் வேறு திசையில் பயணிப்பதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் தேஜ் புயல் ஆபத்தில் இருந்து தப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்துக்கு பாதிப்பில்லை: இது குறித்து குஜராத்தின் அகமதாபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொகந்தி கூறுகையில், அக்டோபர் 22 (இன்று) மாலை அதி தீவிர புயலாக தேஜ் புயல் உருமாறும். தெற்கு ஓமன், ஏமன் கடற்கரை நோக்கி இது நகருகிறது. வடக்கு வடமேற்கு திசையில் தேஜ் புயல் நகர்ந்தாலும் குஜராத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தாது. அடுத்த 7 நாட்களுக்கு குஜராத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவித்துள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications