பிபி, சுகர் மாத்திரையெல்லாம் கொடுத்தாங்க! அன்பான கிராம மக்கள்.. ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகள் உருக்கம்
சென்னை: பிபி, சுகர் மாத்திரையெல்லாம் கொடுத்தாங்க என கிராம மக்கள் குறித்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் உருக்கமாக தெரிவித்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நின்றாலும் வெள்ளம் பெரும்பாலான இடங்களில் வடியவில்லை.

பல இடங்களில் சாலைகள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல கிராமங்களை மீட்க முடியாத நிலை இருக்கிறது. சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் நிறைய தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டஇந்த ரயிலில் இருந்த பயணிகளுக்கு அன்று கையில் இருந்த உணவை வைத்து சமாளித்துக் கொண்டனர். அதன் பின்னர் திங்கள்கிழமை அன்று மதியம் வரை அக்கம் பக்கம் தேடி போய் உணவு வாங்கி வந்து உண்டனர்.
ஆனால் திங்கள்கிழமை மதியத்திற்கு மேல் வெள்ள நீர் அதிகம் உயர தொடங்கியதால் பயணிகளால் சாப்பாடு வாங்க வெளியே போக முடியவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உள்ளூர் கிராம மக்களே உணவு தந்ததாக உருக்கமாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முதல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் போதும் போதும் என்ற அளவுக்கு உணவுகளை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
3 நாட்களாக ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த அவர்களை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ரயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்த பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு ரயில் இன்று காலை வந்தடைந்தது.
பயணிகளுக்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே சார்பில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னைக்கு பத்திரமாக வந்த அவர்களுக்கு மீண்டும் உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டது.
அப்போது பயணிகள் கூறுகையில், எங்களுக்கு முழுக்க முழுக்க கிராம மக்கள்தான் உதவினார்கள். அவர்களுக்கு உணவு இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு வேளா வேளைக்கு சமைத்து கொடுத்தார்கள். அது போல் அவர்களுடைய போர்வை, பெட்ஷீட் உள்ளிட்டவைகளையும் எங்களுக்கு கொடுத்தனர்.
அரசு சார்பில் உதவினார்கள் நாங்கள் இல்லை என சொல்லவில்லை, ஆனால் திங்கள்கிழமை முழுக்க எங்களுக்கு உதவினார்கள். குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டைகளை செய்து கொடுத்தார்கள். அவர்கள் உண்ணும் பிபி மாத்திரை, சுகர் மாத்திரைகளை எல்லாம் கொடுத்தார்கள். அந்த மக்களின் அன்பை மறக்கவே முடியாது.
எங்களை கடைசி வரை நின்று வழி அனுப்பிவைத்தார்கள். இனி அந்த பக்கம் போனால் அந்த கிராம மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். அவர்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் வைத்து சமைத்து கொடுத்துவிட்டார்கள். இனி அவர்களுக்கு சமையல் செய்ய பொருட்கள் இருக்கிறதா என தெரியவில்லை.. அவர்கள் இருந்த பகுதியையும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications