சென்னையில் திடீரென விட்டு விளாசிய மழை.. இரவு வரை தொடரும்.. மேலும் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: சென்னையில் இன்று மாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்று இரவு வரை இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென் மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் காலையில் வெயிலும் மதியத்திற்கு பிறகு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் வடகிழக்கு பகுதிகளில் மழை பெய்தது.

திடீரென கொட்டிய மழை
இதேபோன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. இதேபோன்று சென்னையிலும் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது.
அதன்படியே காலையில் இருந்து வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென மாலை 3.30 மணியளவில் மழை கொட்டியது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் குடையின்றி வெளியே சென்ற மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மக்கள் மகிழ்ச்சி
கொளுத்தும் வெயிலை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்திருப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மழையான இன்று இரவு வரை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்
முன்னதாக வானிலை மையம் கூறுகையில், "சென்னையில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டூ 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications