சென்னையில் திடீரென விட்டு விளாசிய மழை.. இரவு வரை தொடரும்.. மேலும் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: சென்னையில் இன்று மாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்று இரவு வரை இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென் மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் காலையில் வெயிலும் மதியத்திற்கு பிறகு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் வடகிழக்கு பகுதிகளில் மழை பெய்தது.

திடீரென கொட்டிய மழை
இதேபோன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. இதேபோன்று சென்னையிலும் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது.
அதன்படியே காலையில் இருந்து வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென மாலை 3.30 மணியளவில் மழை கொட்டியது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் குடையின்றி வெளியே சென்ற மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மக்கள் மகிழ்ச்சி
கொளுத்தும் வெயிலை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்திருப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மழையான இன்று இரவு வரை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்
முன்னதாக வானிலை மையம் கூறுகையில், "சென்னையில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டூ 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்












Click it and Unblock the Notifications