புறநகர் சென்னை டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் தீவிரமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையின் புறநகர் பகுதிகள் உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம், மாலை 4 மணி வரை மஞ்சள் அலர்ட் கொடுத்திருக்கிறது. அதாவது இந்த மாவட்டங்களில் 64.5 மில்லிமீட்டர் (மி.மீ) முதல் 115.5 மில்லிமீட்டர் (மி.மீ) வரை மழை பெய்யும். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக இந்த எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.

அதேபோல, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் 115.6 மில்லிமீட்டர் (மி.மீ) முதல் 204.4 மில்லிமீட்டர் (மி.மீ) மழை பெய்யும். இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கலாம். இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தவே இந்த எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. இருப்பினும் தமிழகம் போதுமான அளவுக்கு மழையை பெறவில்லை. எனவே, விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. மறுபுறம் கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை, காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications