வெடித்து கொட்டப்போகும் மழை.. ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! இந்த மாவட்ட மக்கள் உஷார்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனையடுத்து, நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்துக்கு நாளை மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாளை மறுநாள் (ஜன.10) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜன.11ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் விழுப்புரத்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications