அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே!
சென்னை: தமிழகத்தில் வழக்கம் போல மார்ச் தொடக்கத்திலேயே கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஆனால், திடீரென மழையும் தீவிரம் எடுத்திருக்கிறது. திடீர் மழை காரணமாக மக்கள் சற்று நிம்மதியடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில், மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் அறிக்கையில், "தமிழகத்தில் இன்று தொடங்கி மார்ச்.24 வரை மழை நீடிக்கும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்திருக்கிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் தேங்கியிருக்கிறது.

இன்றும் நாளையும் எப்படி இருக்கும்?
மேலும் தெரிவித்திருப்பதாவது, "மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும் நாளையும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 20ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை
- 21ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 22ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.
- 23 மற்றும் 24ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை வானிலை
இன்று (18-03-2026) மற்றும் நாளை (19-03-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications