18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை மழை தீவிரமெடுத்திருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னதாக நேற்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தது. இந்நிலையில் தற்போது 18 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில்,

- குன்னூர்
- ஈரோடு
- கடலூர்
- மயிலாடுதுறை
- பெரம்பலூர்
- கோவை
- அரியலூர்
- தென்காசி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- விருதுநகர்
- சிவகங்கை
- மதுரை
- கள்ளக்குறிச்சி
- தேனி
ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரவு 10 மணி வரை, இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications