தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை! உஷார் மக்களே!
சென்னை: கடைசியாக தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மழை பெய்து 26 வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பின்னர் மழை பெய்வது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

23-02-2026 முதல் 25-02-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
26-02-2026 மற்றும் 27-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications