"9 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்.." இரவு நேரத்தில் திடீரென வெதர்மேன் போட்ட போஸ்ட்.. டிரெண்டிங்
சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பு ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அவரது போஸ்ட் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். வெதர்மேன் இரவு நேரம் போட்ட போட்ஸ்ட் என்ன.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.!
பொதுவாகவே டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தான் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மழை கிடைக்கும். இந்தக் காலத்தில் கிடைக்கும் மழையைப் பொறுத்தே அடுத்தாண்டு கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுமா என்பது தெரியும். இதனால் டிசம்பர் மாத கிளைமேட் சென்னைக்கு ரொம்பவே முக்கியமானது.

புயல்
இதே டிசம்பர் மாதம் தான் சென்னையில் புயல்களும் கூட தாக்கும். கடந்த காலங்களில் இப்படிப் பல முறை டிசம்பர் மாதம் புயல்கள் தாக்கி கனமழை கொட்டியிருக்கிறது. அப்படி சென்னையைத் தாக்கிய குறிப்பிடத்தக்கப் புயல்களில் ஒன்று வர்தா புயல். 2016ல் சென்னையைத் தாக்கிய வர்தா புயல் காரணமாகப் பாதிப்புகள் மோசமாக இருந்தது.
இந்தப் புயல் மற்ற புயல்களைப் போலக் கனமழையைக் கொடுக்கவில்லை. ஆனால், அதிவேக காற்று சென்னை நகரைப் புரட்டிப்போட்டது. கனமழையை விட இந்தக் காற்று நகரை மொத்தமாக நாசம் செய்தது. மரங்கள் சாய்வது தொடங்கி பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வரவே பல நாட்கள் ஆனது. அந்தளவுக்குப் பாதிப்புகள் அதிகமாக இருந்தது.
வெதர்மேன்
இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயல் எப்படித் தாக்கியது. அப்போது எந்தளவுக்கு அதிவேக காற்று வீசியது என்பது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்குக் கீழ் நெட்டிசன்கள் பலரும் தங்கள் வர்தா புயல் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
வர்தா
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மணிக்கு 139 கிமீ காற்றோடு வர்தா புயல் சென்னையை உலுக்கியது. 1994ஆம் ஆண்டு புயலுக்குப் பிறகு, இத்தகைய தீவிரமான காற்றை சென்னை கண்டதில்லை.. அப்போது (1994), காற்று மணிக்கு 132 கிமீ வேகத்தை எட்டி இருந்தது. நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தால், கடந்த நூற்றாண்டில் சென்னையைக் கடந்த மிக வலிமையான புயல் 1966 நவம்பரில் ஏற்பட்டதாகும்
2015 பெருவெள்ளத்திற்குப் பிறகு, வீட்டிலேயே இருங்கள் பணிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வர்தா புயல் ஏற்பட்ட 2016 டிசம்பர் 12ம் தேதி வந்தது. அன்று வீசிய கடும் காற்றின் சத்தம் இன்றும் பலரது நினைவில் எதிரொலிக்கிறது.
அரிதான புயல்
சென்னையைத் தாக்கும் புயல்கள் அரிதாகவே மணிக்கு 120 கிமீ என்ற வேகத்தைத் தாண்டும். கடந்த 75 ஆண்டுகளில் இதுபோல மூன்று நிகழ்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சென்னை மக்களுக்கு, 2015ஆம் ஆண்டின் பெரும் வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு, வர்தா புயல் ஒரு மறக்க முடியாத நிகழ்வானது. இயற்கை தனது முழு பலத்தைக் காட்டியது. அதேநேரம் அன்று இந்த நகரமும் மீண்டு எழுவோம் என்ற உறுதியைப் பறைசாற்றியது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
1000 கிமீ நீண்ட மழை மேகங்கள்.. கொட்டி தீர்க்குதே கனமழை.. இப்படி ஒன்று நடந்ததே இல்லை போல -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications