ராமேஸ்வரத்தில் "சூப்பர் கிளவுட் பர்ஸ்ட்"!வடகிழக்கு பருவமழையில் காயல்பட்டினத்தை கவனித்தீர்களா?
சென்னை: தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை வெதர்மேன் பிரதீப் ஜான் பட்டியலிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

ராமேஸ்வரத்தில் இந்த ஆண்டு 400 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் கடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் 900 மி.மீ. மழையும் கடந்த 2022 ஆம் ஆண்டு 400 ம.மீ. மழையும் பெய்துள்ளது. இன்றைய தினமும் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
அது போல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதில் இருந்து சற்று ஓய்வு உண்டு. ராமேஸ்வரத்தில் 438 மி.மீ. , தங்கச்சிமடத்தில் 338.4 மி.மீ. மழையும் பாம்பனில் 280 மி.மீ. மழையும் மண்டபத்தில் 271.2 மீ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ராமநாதபுரத்திற்கு பிறகு நாகை மாவட்டத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது. அதன்படி கோடியக்கரை, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் 362 மி.மீ மழை பெய்துள்ளது. இது போன்று அடர்த்தி கொண்ட மழையை எனது வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. இதை நாம் மேகவெடிப்பு என நாம் கூறக் கூடாது, இதை சூப்பர் மேகவெடிப்பு என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (நவ.21) ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications