புயல் வந்தாலும் அசையாது பாரு.. கரண்ட் கட் இல்லை.. 3,00,000 கம்பங்கள் ரெடி- தங்கம் தென்னரசு
சென்னை: மிக் ஜாம் புயல் மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழ்நாடு முழுவதும் 3,00,000 மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மிக் ஜாம் புயலால் அதிகம் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படும் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 3,650 மின் கம்பங்கள், 450 கி.மீ. தாழ்வழுத்த மின் கம்பிகள் மற்றும் 40 மின்மாற்றிகள் தற்போது தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மின்வாரியம் எந்தளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;
''முதலமைச்சர் நேற்று முன்தினம் அறிவுறுத்தியதைப் போல, இந்த புயலால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புயலின் காரணமாக மிக அதிகமான கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டமாக திருவள்ளுர் மாவட்டம் கருதப்படுவதால், கடலோரப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய துறையின் அதிகாரிகளுக்கு அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மின் வாரிய அதிகாரிகள் எல்லா இடத்திலும் தயார் நிலையில் இருக்கின்றனர். மின் தடை ஏதும் ஏற்படாமல் உடனடியாக சூழ்நிலையை சமாளிக்க கூடிய அளவிற்கு களப்பணியாளர்களையும் தளவாடப் பொருட்களையும் நாங்கள் இப்போது சேமித்து வைத்துள்ளோம். எந்த சூழ்நிலையும் சமாளிக்கக் கூடிய வகையில் தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்காக லாரி, ஜேசிபி மற்றும் கிரேன் போன்ற வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே 3,00,000-ற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தயாராக உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 3,650 மின் கம்பங்கள், 450 கி.மீ. தாழ்வழுத்த மின் கம்பிகள் மற்றும் 40 மின்மாற்றிகள் தற்போது தயாராக இருக்கிறது. களப்பணியாளர்கள் பொருத்த மட்டில் 1,500 நபர்கள் தயாராக வைத்துள்ளோம். இந்த துணைமின் நிலையத்தில் ஏறத்தாழ 350 களப்பணியாளர்களை மின் சீரமைப்பு பணிகளுக்காக வைத்துள்ளோம்.
அதே போல, மிகை உயர் மின்னழுத்தப் பாதைகளைப் பொருத்தமட்டில் 15 கி.மீ. மின் கம்பிகள், 1,000 இன்சுலேட்டர்கள் மற்றும் மிகை உயர் மின்னழுத்தப் பணி செய்யக்கூடிய பணியாளர்களையும் இங்கே தயார்நிலையில் வைத்திருக்கிறோம். ஆக எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே பணி புரிய மின் வாரியத்தின் ஊழியர்கள் எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறார்கள்.
முக்கியமாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, மருத்துவமனை, தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு மின்சாரம் தடைப்படாமல், முன்னுரிமை அடிப்படையில் சீரான மின்விநியோகம் வழங்கிட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதின் பேரில் இன்றைக்கு இந்த துணைமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ''
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications