மிகப்பெரிய வெள்ளம் வரப்போகுது.. கப்பல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. அன்றே கணித்த பூசாரி அய்யா
திருச்செந்தூர்: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. காணும் இடமெங்கும் தண்ணீர் தான். வெள்ளம் வற்றினாலும் அதனால் ஏற்பட்ட சோகம் மறைய பல மாதங்கள் ஆகும். இந்த மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ளத்தை முன்பே கணித்துள்ளார் சாமியாடி அய்யா ஒருவர்.
புயல், மழை, வெள்ளம் பற்றி வானிலை ஆய்வு மையம் கணித்து சொல்கிறது. அதி கனமழை வரைக்கும்தான் கணிக்க முடியும் என்று கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள். தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சொன்னது போல கடந்த 16ஆம் தேதி இரவு முதல் 18ஆம் தேதி இரவு வரைக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.

எங்கும் வெள்ளக்காடாக மாறியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. பேருந்து, ரயில் சேவையும் முடங்கியது.படகுகள் கூட செல்ல முடியாத அளவிற்கு பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த மழை வெள்ளத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பே தமிழ் பஞ்சாங்கம் கணித்திருந்தது.

கடந்த 10ஆம் தேதி வீரபாண்டிய பட்டினத்தில் கோவில் திருவிழாவின் போது சாமியாடிய ஒருவர், மிகப்பெரிய வெள்ளம் வரப்போகிறது கப்பல் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மிராக்கிள் மிராக்கிள் என்று சொல்வார்கள். திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டிணத்தில் கடந்த பத்தாம் தேதியே, கப்பல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் மிகப்பெரும் வெள்ளம் வரப் போகிறது என்று குறிசொன்ன எங்கள் அய்யா. இதுதாண்டா உண்மையான மிராக்கிள் என்று பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications