8 மாவட்டங்களுக்கு வார்னிங்.. அடுத்த 2 மணி நேரம் ரொம்ப முக்கியம்! அலர்ட்டா இருங்க!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியானது, காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடலுக்கு அருகே நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்திருக்கிறது.
"பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவுள்ளது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வலுப்பெறக்கூடும்.
எனவே தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
23 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 26 மற்றும் 27ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்திருந்தது.
இப்படி இருக்கையில், இன்று காலை 10 மணி வரை, 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நாகை, திருவாரூர் மற்றும் ராமநாதபுரத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications