சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.. பாதி வழியில் தவிக்கும் பயணிகள்!
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், பெங்களூரிலிருந்து வரும் ரயில்கள் சென்ட்ரலுக்குள் வராமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன.
சென்னையிலிருந்து மைசூர் செல்லும் வண்டி எண் 12685 ரயில் சென்ட்ரலுக்கு பதிலாக பெரம்பூரிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டிருக்கிறது.

சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதி செல்லும் வண்டி எண் 16203 ரயில், ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மும்பையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வண்டி எண் 12163 லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ஆவடியுடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல இன்று புறப்படும் வண்டி சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து புறப்பட்டிருக்கிறது.
சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் வண்டி எண் 12623 ரயில், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது
மங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் வண்டி எண் 22638 வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு செல்லாமல் திருவள்ளூருடன் நிறுத்தப்படுகிறது.
அதேபோல சென்னை சென்ட்ரலிலிருந்து மங்களூரு செல்லும் வண்டி எண் 12601 சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சென்ட்ரல் நோக்கி வரும் பல ரயில்கள் அரகோணத்திலும், திருவள்ளூரிலும் பெரம்பூரிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் லிஸ்ட்டை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.














Click it and Unblock the Notifications