Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளியே வராதீங்க.. தமிழ்நாட்டில் திடீர்னு உயரும் வெப்பநிலை.. அதென்ன , "ஹீட் ஸ்ட்ரெஸ்"? நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திடீர் வெப்ப அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

பொதுவாகவே, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வெப்பம் குறைந்து காற்று வீச ஆரம்பித்துவிடும்.. ஆனால் கடந்த சில நாட்களாகவே, வெயில் தாக்கம் நம் மாநிலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.

Weather Report and Do You know what is reason for sudden increase in temperature in Tamil Nadu

வழக்கமாக, ஜுன், ஜூலை மாதங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும்.. ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய வெயில் இப்போதுவரை அதிகரித்து வருகிறது. நேற்றுகூட, 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது.. ஏற்கனவே, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையமும் எச்சரித்தபடியே இருந்தது..

ஹீட் ஸ்ட்ரெஸ்: இப்படி வெப்ப நிலை தொடர்ந்து அதிகரிப்பது, ஈரப்பதம் உயர்வு காரணமாக, "ஹீட் ஸ்ட்ரெஸ்" எனப்படும் வெப்ப அழுத்தம் ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இந்த திடீர் வெயில் தாக்கம் ஏன் என்பது குறித்து, வானிலை மைய அதிகாரி கீதா விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.

அவர் சொல்லும்போது, "பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுத்து விடுகிறது.. அதனால்தான் எப்போதுமே, கேரள பகுதிக்கு தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும்... இப்போது, வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் வடமேற்கு திசையில் இருந்து வருகிற காற்று தடைபட்டுள்ளது.

லேசான மழை: நிலப்பகுதியில் இருந்துதான் காற்று வருகிறது.... இப்படி வரும்போது இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆனால் அந்த மழையும் பெய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

மேற்கு திசையில் இருந்து காற்று வரவர வெப்பம் குறையும். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று இல்லாததால் தான் வெயில் இயல்பை விட அதிகரித்தது.. ஆனால், இந்த வெப்பம் படிப்படியாக குறையும்... தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படியான வெயில் தாக்குவது இயல்பானது.. அதுவும் தமிழ்நாட்டுக்கு இது ஒன்றும் புதிது கிடையாது" என்று கூறியிருந்தார்.
வடமாநிலம்: அதேசமயம், சில தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பொதுவான அறிவுரைகளை தந்துள்ளனர். "வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வீசும் மேற்கு திசை காற்று, வெப்பத்தை உயர்த்துவதாக அமைந்துள்ளது.. இந்நேரத்தில், கடல் காற்றின் ஆதிக்கம் அதிகரிக்க வேண்டும் அல்லது வளிமண்டல சுழற்சி காரணமாக மழைபொழிவு ஏற்பட்டால் வெப்பத்தின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும்.

ஆனால், இது எதுவுமே நடக்காதபோது, வெப்பம் மட்டுமே அதிகரிக்கிறது.. இந்நேரத்தில், வெளியில் பைக்கில் செல்வோர், கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.. உடல் பலவீனமாக இந்த வெயில் திடீர் பாதிப்பை தரக்கூடும்..

கண் கண்ணாடி: அதிகமாக வியர்வை வெளியேறும். மயக்கம் வரலாம்.. இதைத்தவிர்க்க, தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், காலை, 11 மணி முதல் 4 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதையும் தவிர்த்து கொள்ளலாம். முக்கியமாக, டாக்டர்கள் பரிந்துரைத்த வெப்பத்தடுப்பு லோஷன்கள், கண் கண்ணாடிகளை பயன்படுத்தலாம்" என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+