Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறி வச்சா.. மிஸ் ஆகாது! தமிழ்நாட்டில்தான் பெங்கல் புயல் கரையை கடக்கும்.. ஆனால்.. ஒரு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 21 செ.மீ-க்கு அதிகமான மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் இன்றும் (நவ.27) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டு உள்ள புயல் சின்னத்தின் கண் தொடர்பான முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வானிலை மைய கணிப்புபடி இன்று புயலாக மாறும். இதற்கு 'FENGAL - ஃபெங்கல்' என பெயர் சூட்டப்படும். இப்பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.

weather tamilnadu weatherman

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகைக்கு 400 கி.மீ. தென் கிழக்கிலும், சென்னைக்கு 590 கிமீ தெற்கு - தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
அரியலூர்
பெரம்பலூர்
சிவகங்கை
ராமநாதபுரம்
நீலகிரி
கோவை
கள்ளக்குறிச்சி
திருச்சி
தென்காசி
விருதுநகர்
மதுரை
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி

கரையை கடக்கும்: இந்த புயல் தமிழ்நாட்டில் கரையை கடக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இது மிஸ்ஸாக வாய்ப்பே இல்லை. சரியாக 30ம் தேதி வடதமிழ்நாட்டில் கரையை கடக்கும்.

இந்த புயலின் கண் உருவாகவில்லை என்றாலும் தாழ்வு மையத்தின் கண் போன்ற மையம் உருவாகி வருகிறது. இது வலுவாக இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 900 கிமீ தூரத்தில் கண் உள்ளது. அதன் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் புயல் கண்ணுடன் இருக்குமா.. கண்ணை கொண்டு இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த ஒரு விஷயம்தான் இப்போது வரை கேள்வியாக உள்ளது.

நாகையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது.

அடுத்த ஒரு வாரம் தமிழ்நாடு வானிலை மைய அறிவிப்புப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+