மழை பெய்ய என்ன காரணம்? மே 12ல் மேலடுக்கு சுழற்சி! வெதர்மேன் குட் நியூஸ்! இனி ஊட்டிக்கு வேண்டாம்!
சென்னை: தமிழகத்தில் வரும் மே 12 அல்லது 13 ஆம் தேதி காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி உருவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நல்லதொரு செய்தியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெப்ப அலை படிப்படியாக குறையும். மே 5 ஆம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் வெப்ப அலை இருந்ததை பார்த்தோம்.

ஆனால் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதுவும் ஒரு காரணமாக சொன்னாலும் வரும் நாட்களில் மேலடுக்கு சுழற்சி, இலங்கைக்கு அருகேயோ அல்லது குமரி கடலுக்கு அருகேயோ உருவாக வாய்ப்பிருக்கிறது.
தரை காற்று வீசுவது நின்றுவிட்டு கடலில் இருந்து கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படும். இன்று சென்னையில் ஆங்காங்கே மழை பெய்வதை பார்த்தோம். மழை மேகங்களும் கடல் பகுதியில் இருந்து உள்ளே வருவதையும் பார்த்தோம்.
கிழக்கிலிருந்து காற்று வீசும் போது அது வறண்ட காற்றாக இல்லாமல் ஈரப்பதம் கொண்ட காற்றாக இருக்கும். இதனால் வெப்பத்தின் தாக்கமும் குறைந்து காணப்படும். மழை பெய்வது மற்றும் கிழக்கு காற்று ஆகிய இரு காரணங்களால் வெப்பம் குறைந்து காணப்படும்.
இனி சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். உள்மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழையின் தாக்கத்தை பார்க்கிறோம். மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டிய உள் மாவட்டங்களான தேனி, விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
12 ஆம் தேதி அல்லது 13 ஆம் தேதிக்கு பிறகு மேலடுக்கு சுழற்சி உருவான பிறகு கடலோர மாவட்டங்கள், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். இந்த மழை ஆங்காங்கே இல்லாமல் பரவலாக பெய்யும். மேலடுக்கு சுழற்சி உருவானது மே 21, 22 ஆகிய தேதிகளில் பரவலான மழை பெய்யும்.
வழக்கம் போல் மே இறுதியில் கடைசி வாரத்தில் காற்றழுத்தமோ புயல் சின்னமோ உருவாகி தென் மேற்கு பருவமழை வங்கக் கடலில் உருவாவதை பார்க்கிறோம். இந்த ஆண்டும் மே 12 இல் உருவாகும் மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் மே 21,22 வரை இருக்கக் கூடும்.
எனவே இந்த மாதம் இறுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது புயலாக மாற வாய்ப்புள்ளது. அது மாதிரியாக வங்கக் கடலில் புயல்கள் உருவானால் மீண்டும் தரைக் காற்று வீசக் கூடும். அந்த நேரத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்த இரு வாரங்களுக்கு வெப்பம் குறைந்தே காணப்படும்.
மே 24 க்கு பிறகு புயல் சின்னம் உருவானால் வெப்பம் அதிகரிக்கும். பொதுவாக ஏப்ரல் மாதம் மழை பெய்யும். ஆனால் உள் மாவட்டங்களில் மழை இல்லை. இதனால் வெப்பம் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது. 1997, 1998, 2002, 2003, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ ஆண்டாக இருந்ததால் வெப்பம் அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு ஒரே மாதிரியான வெப்பத்தை 10, 20 நாட்களாக பார்த்தோம்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது நமக்கு மழை கிடைக்கும். காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், வால்பாறை, பரம்பிக்குளம், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய இடங்களில் பருவமழை கிடைக்கும். மற்ற இடங்களில் எல்லாம் தமிழகத்தை பொருத்தமட்டில் வெப்ப சலன மழை பெய்யும். காலையில் வெயிலாக இருக்கும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications