சென்னைக்கு அருகே..வெறும் 50 கிமீ தூரத்தில்! கடலில் நடந்த அதிசயம்! கொஞ்சம் தள்ளி நடந்திருந்தா! க்ளோஸ்
சென்னை: சென்னைக்கு அருகே கடலில் 50 கிமீ தூரத்தில் அதிசய சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. சென்னையில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வரும் நிலையில் சுவாரசியமான சம்பவம் ஒன்று சென்னைக்கு அருகே நடந்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் மழை பெய்ய தொடங்கினால் இரவு முழுக்க விடாமல் பெய்கிறது. அதேபோல் அதிகாலையிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பல இடங்களில் மழை 100 மிமீ வரை தினமும் பெய்கிறது.

விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக காலை நேரத்தில் மழை பெய்வதால் மக்கள் பணிக்கு செல்வதும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதும் இயலாத காரியம் ஆகி உள்ளது.
வானிலை மைய அறிவிப்பு; இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.
23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்,
தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்
இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.11.2023 முதல் 28.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்
ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும். இன்றைய
வெப்பநிலை 25-27 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்
இருக்கக்கூடும்.
முக்கியமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என்று கூறியுள்ளது.
சென்னைக்கு அருகே நடந்த சம்பவம்: இந்த நிலையில்தான் சென்னைக்கு மிக அருகே கடல் பகுதியில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. சென்னைக்கு அருகே 50 கிமீ தூரத்தில் வங்கக்கடல் பகுதியில் 200 மிமீ மழை பெய்துள்ளது. இன்று அதிகாலை பெய்த மழை ஆகும். கடந்த ஒரு வாரமாக அங்கே இவ்வளவு மழை பெய்கிறது.
அந்த மழை மட்டும் கொஞ்சம் தள்ளி பெய்திருந்தால் தினமும் சென்னையில் வெள்ளம் ஏற்படும் அளவிற்கு மழையாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications