அந்த 15 நிமிடம்.. வானிலை மைய மீட்டரில் காட்டியது என்ன? வல்லுனர் சொன்ன ஷாக் அப்டேட்.. கவனம்!
திருநெல்வேலி: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கே விடாமல் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் 60 செமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
சென்னை ரெயின்ஸ்: இந்த மழை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு வெளியிட்ட கணிப்பில், நேற்று திருச்செந்தூரில் 606 மிமீ அளவில் மழை பெய்தது. விடாமல் 12 மணி நேரம் மழை பெய்தது. 12 மணி நேரத்திற்கு பின் ஒரே ஒரு 15 நிமிடம் அங்கே மழை இல்லாமல் இருந்தது. இதை 12 மணி நேரங்களுக்கு பின் இந்திய வானிலை மைய AWS கருவி பதிவு செய்துள்ளது. திருச்செந்தூர், திருநெல்வேலியில் வரும் நேரங்களில் மழை குறைந்தாலும்.. தூத்துக்குடியில் மழை நீடிக்கும்.
திருநெல்வேலி கடற்கரையின் தென்கிழக்கு அருகே புதிய வெப்பச்சலனம் உருவாகி வரும் வேளையில், இது மெதுவாக மேற்கு வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நஹ்கர்கிறது. மழையை பொறுத்தவரை இது கன்னியாகுமரிக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம், ஆனால் விருதுநகர் போன்ற இடங்களுக்கு மோசமான செய்தியாக இருக்கலாம்.

அதிக மழை: இது மலை தொடர்ச்சிகளில் மிக அதிக மழையைக் காணக்கூடும். தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் இன்று இரவு வரை கண்காணிப்பில் இருக்க வேண்டும். இந்த பகுதியை நோக்கி புதிய மழை மேகங்கள்.. பட்டை பட்டையாக வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும். திருநெல்வேலி போன்ற பார்டர் ஏரியாக்களில் மழை பெய்யும்.
உள்ளே இருக்கும் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்யும், என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
( கோட் ரெட்! இனி இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலே வாழணும்! ஐநா எச்சரித்தது போலவே தமிழ்நாட்டில் வெள்ளம் )
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications