வருகிறான் வங்கக்கடல் "ராசா"! புயல் எங்கே தாக்கும்? குறி வைக்கப்பட்ட இடம் இதான்! வல்லுனர்கள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி எப்போது புயலாக மாறும், எங்கே செல்லும் என்று தனியார் வானிலை எக்ஸ்பர்ட் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் டிசம்பர் 1ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் எப்படி உருவாகும் என்பதும் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

Where will the new cyclone is farming in Bay of Bengal make landfall in Tamil Nadu

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

தனியார் மையம் கணிப்பு; இந்த புயல் தொடர்பாக சென்னை ரெயின்ஸ் (https://www.chennairains.com) வானிலை அமைப்பு கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், பொதுவாகவே வடகிழக்கு பருவமழை ஏற்படும் போதெல்லாம் தீவிர புயல் சீசன் ஏற்படுவது வழக்கம். பொதுவாக ஏப்ரல் / மே காலம் பருவமழைக்கு முந்தைய சூறாவளி பருவம் மற்றும் அக்டோபர் - டிசம்பர் காலம் பருவமழைக்கு பிந்தைய சூறாவளி பருவமாகும். வடகிழக்கு பருவமழை புயல் இரண்டும் எல்லாம் காலமும் ஒத்துப்போவதால்தான் பொதுவாக வடகிழக்கு பருவமழையை எவ்வளவு மழை பெய்யும் என்பதை கணிப்பதே கஷ்டமாக உள்ளது .

ஆனால் பெரும்பாலான சமயங்களில் ஏதாவது ஒரு புயல் சின்னம் மொத்தமாக பெய்ய போகும் மழையின் அளவை மாற்றம். உதாரணமாக 2008 ஆம் ஆண்டு நிஷா புயல் போன்ற சூறாவளி, டெல்டாவிலிருந்து சென்னை வரையிலான அனைத்து பகுதிகளுக்கு நிறைய மழையை கொடுத்தது. இது தமிழ்நாடு கடற்கரையில் 24 மணிநேரம் கிட்டத்தட்ட நகராமல் கூட நின்றது. 2016ல் இதேபோல்தான் நாடா, வர்தா போன்ற புயல்கள் ஏற்பட்டன.

வானிலை தாழ்வு மையம்: இந்த நிலையில்தான் தாய்லாந்து வளைகுடாவில் இருந்து நகர்ந்து வந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை ஐஎம்டி நேற்று உறுதி செய்தது. இந்த புயல் சின்னம் எப்படி உருவாகும், அதற்கு என்ன ஆகும், எங்கே செல்லும் என்பது கிட்டத்தட்ட பூனை, எலி மோதல் போல கணிக்க முடியாமல் இங்கும் அங்கும் செல்வதாக முன்பே கணித்து இருந்தோம்.

இந்த புயல் எங்கே செல்லும் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அது செல்ல போகும் பாதை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது. பெரும்பாலும் இது வங்கதேசம், வங்காளம் பக்கம் செல்லாமல் தென்னிந்திய கடல் பகுதி பக்கம் வரவே வாய்ப்புகள் உள்ளன.

சென்னை புயல்: வலிமை பெறுகிறது: ஆனால் ஒன்று உறுதி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது என்று வானிலை கணிப்பு மாடல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24- 36 மணி நேரத்தில் இது தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் மேற்கு வடமேற்கு திசையில் செல்லும். அதன்பின் டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும்.

பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும். இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயத்தால் பெரும்பாலும் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 4ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+