சென்னைக்கு மட்டும் ஏன் இப்படி.. பதிவானது 35 டிகிரி.. ஆனா 51 டிகிரி மாதிரி எரியுதே! என்ன காரணம்
சென்னை: ஒவ்வொரு நாளும் வானிலை அறிக்கையில் அதிகபட்சம் வெப்பம் பதிவான இடங்களில் சென்னை வராவிட்டாலும் சென்னைவாசிகள் அதீத வெப்பத்தால் படும் பாடு திண்டாட்டமாகவே இருக்கிறது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இப்போது எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதிலும் இந்தாண்டு நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கும் அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
கோடை வெப்பம்: தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல் அல்லது மே மாதம் தான் கோடை வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இந்தாண்டு பிப். மாதமே பல இடங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பிப். மாதமே ஈரோட்டில் ஒரு சில நாட்கள் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. இப்போது பெரும்பாலான இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
நேற்று கூட தமிழ்நாட்டில் மொத்தம் 17 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. குறிப்பாக பரமத்தி வேலூரில் 110.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 110.12 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூா், வேலூர், மதுரை விமானநிலையம். திருத்தணி, திருச்சியில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
சென்னை வெப்பம்: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களையும் கூட இந்தாண்டு விட்டுவைக்கவில்லை. அங்கும் வெப்பம் கணிசமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மேற்கு மாவட்டங்கள்- ஈரோடு, திருப்பூர், கரூரில் தான் வெப்பம் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இவை குறித்து எல்லாம் நாம் செய்திகளில் பார்த்து இருப்போம். ஆனால், சென்னையில் அதீத வெப்பம் நிலவுவதாக வானிலை அறிக்கையில் வருவதில்லை. அங்கு 95-100 டிகிரி பாரன்ஹீட்டில் தான் வெப்பம் இருக்கிறது.

ஆனாலும், சென்னை மக்களிடம் இதைச் சொன்னால் நம்ப மாட்டார்கள். அதீத வெப்பமே நிலவுவதாகச் சொல்வார்கள். ஆனால், வானிலை ரிப்போர்ட்டில் மட்டும் ஏன் வெப்பம் குறைவாக இருப்பது போல இருக்கிறது.. ஏன் இந்த வேறுபாடு.. இதில் எது சரியானது என்பது குறித்துப் பார்க்கலாம்.
வேறுபாடு ஏன்: பொதுவாக வெப்பத்தை அளவிடும் போது பதிவாகும் வெப்பம், மக்கள் உணரும் வெப்பம் என இரண்டு இருக்கும்.. அதாவது கடலோர பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் அது உடலில் உருவாகும் வியர்வையைச் சீக்கிரம் ஆவியாக விடாது. இதனால் உடலில் ஒரு வித பிசுபிசுப்பு தன்மை ஏற்படும். பொதுவாக வெப்பம் அதிகமாக இருக்கும் போது வியர்வைத் தான் நமது உடல் சூட்டைக் குறைக்க உதவும். அப்படி இருக்கும் போது வியர்வை ஆவியாகாமல் போனால் அதீத வெப்பம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
வெப்பம் + ஈரப்பதம்: வெப்பமும் ஈரப்பதமும் சேரும் போது அது மிகக் கொடூரமாக இருக்கும் என்பதற்குச் சென்னை தான் சாட்சி. அதேநேரம் சென்னைக்கு மட்டும் இப்படி நடப்பதில்லை.. சென்னை தூத்துக்குடி எனக் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வெப்பம் குறைவாகப் பதிவானாலும் மக்கள் அதிக வெப்பத்தை உணர்வார்கள். மக்கள் உணரும் வெப்பத்தைத் தான் ரியல் ஃபீல் என்று குறிப்பிடுவார்கள்.
இன்று கூட சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தான் பதிவானது. ஆனால், அது ஈரப்பதம் காரணமாக அது 122 டிகிரி பாரன்ஹீட்டை போலவே தோன்றியிருக்கிறது. இதன் காரணமாகவே கடலில் இருந்து தள்ளி இருக்கும் மாவட்டங்களில் பதிவாகும் வெப்பத்தைக் காட்டிலும் சென்னையில் குறைவான வெப்பம் பதிவானாலும் மக்கள் அதிக வெப்பத்தை உணர்கிறார்கள். இதேபோல உங்கள் ஏரியாவில் இப்போது என்ன வெப்பம் நிலவுகிறது.. ஆனால் அதை எந்தளவு வெப்பமாக நாம் உணர்கிறோம் என்பதை உங்கள் மொபைலில் இருக்கும் வெதர் செயலியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications