சென்னை உட்பட.. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார் மக்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் வீசி வரும் குளிர் அலையின் தாக்கம், தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மதியம் 1 மணி வரை, லேசான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?
லேசான மழைக்குதான் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 24 மணி நேரத்தில் 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ள நேரத்தில்தான் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications