புயலை ஓவர் டேக் செய்யும் பருவமழை.. இரவு 7 மணிக்குள் சென்னை+15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
சென்னை: ஃபெஞ்சல் புயல் ஓய்ந்த பின்னர் பரவலாக மழையின் தாக்கமும் குறைந்திருக்கிறது. ஆனாலும் வட மாவட்டங்களில் மழை முழுமையாக குறையவில்லை. இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் இரண்டு பருவமழைகள் பரவலாக மழையை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை. ஜுலை மாதம் தொடங்கும் இந்த மழை, செப்டம்பர் மாதம் வரை இந்தியாவின் 70% நிலப்பரப்புக்கு போதுமான அளவுக்கு மழையை கொடுக்கிறது. இதனையடுத்து அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடுகிறது. இது வங்கக்கடல் ஓரம் உள்ள மாநிலங்களுக்கு தேவையான மழையை கொடுக்கிறது. தமிழ்நாட்டிலும் சென்னை தொடங்கி வட மாவட்டங்கள் இந்த மழையால் பயன் பெறுகின்றன.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இறுதி 2 மாதங்களில் வங்கக்கடலில் ஏற்படும் புயல் காரணமாக மழையின் அளவு அதிகரித்துவிடுகிறது. இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை சென்னை தொடங்கி விழுப்புரம், தஞ்சாவூர் வரை மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த அதிக மழை காரணமாக பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. மறுபுறம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால், கடும் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது புயல் ஓய்ந்திருந்தாலும், மழையின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. குறிப்பாக இன்று இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது,
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
அரியலூர்
கடலூர்
விழுப்புரம்
ராணிப்பேட்டை
கன்னியாகுமரி
திருநெல்வேலி
மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications