பேய் மழை! விழுப்புரம் டூ தேனி.. மாறும் கிளைமேட்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பவருங்கள் மழையை கொடுக்கும். ஆனால் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்காத நிலையில், தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

வெயில் வாட்டி வதைத்த பல நகரங்களில் தற்போது மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடங்கி தஞ்சாவூர் வரை வட கடலோர மாவட்டங்களிலும், அதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் இருக்கிறது.
இப்படி இருக்கையில் இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி என 4 மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இந்த 4 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications